×

பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

மேட்டுப்பாளையம், மே 28: பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரிபாலம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (48). இவர், மேட்டுப்பாளையம் சிடிசி டெப்போவில் டெக்னீசியனாகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கார்முகிலன் (20) இவர், கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி கார்முகிலன் தனது நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே நடந்த கடா வெட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பகல் சுமார் 1.30 மணிக்கு கார்முகிலன் தனது நண்பர்களுடன் நெல்லித்துறை அடுத்துள்ள ஓடைமடுவு பவானி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்முகிலனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : College student ,river ,Bhavani ,
× RELATED பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்