ஈரோடு, மே 28: காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு: ஈரோடு மாநகராட்சி ஸ்vமார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 60 வார்டுகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு குடிநீர், சாக்கடை மற்றும் தார்சாலை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட ரோடுகளும், சேதமடைந்த குடிநீர் குழாய்களையும் முழுமையாக சரி செய்து கொடுக்க வேண்டும்.
மாநகராட்சி 1வது மண்டலத்திற்குட்பட்ட ஆர்.என்.புதூர் மெயின்ரோட்டில் இருந்து சித்தோடு செல்லும் ரோடு முழுவதும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த ரோட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணி நிறைவேறும் வரை, மாநகராட்சி பகுதி முழுவதும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.