×

குப்பைத் தொட்டியான திறந்தவெளி கிணறு

விருதுநகர், மே 28: விருதுநகர் ஏடிபி குடியிருப்பு பகுதியில் திறந்தவெளி கிணற்றில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஏடிபி குடியிருப்பு பகுதியில் திறந்தவெளி கிணறு உள்ளது. இக்கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கடைக்காரர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபட்டு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. சாலையோரம் இருப்பதால் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே, கிணற்றின் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டுவதோடு, குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...