×

தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டாயக் கல்விச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர், மே 28: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தமிழக அரசு அரசாணை 92ன் படி கல்விக் கட்டணம் விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளிலும் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முற்போக்கு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட அமைப்பாளர் எழில்வளவன் முன்னிலை வகித்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,institutions ,
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...