×

தூக்கு போட்டு டீ மாஸ்டர் சாவு

திருப்புத்தூர், மே 28: திருப்புத்தூர் அருகே டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புத்தூர் அருகே டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருப்புத்தூர் அருகே காட்டுநாச்சியாபுரத்தை சேர்ந்தவர் சாத்தையா(43). மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனை செய்வதற்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நாச்சியாபுரம் காவல்நிலைய எஸ்.ஐ ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : death ,
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...