×

விராலிமலை அடுத்த நாங்குபட்டி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் திரண்டனர்

விராலிமலை, மே28: விராலிமலை ஊராட்சி ஒன்றியம் நாங்குபட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நேற்று  நடைபெற்றது. விராலிமலை ஊராட்சி ஒன்றியம் நாங்குபட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. துவங்கிய நாள் முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மண்டகப்படி காரர்களால் நடைபெற்றது வந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் காவடி எடுத்து  தேரோடும் வீதி வலம் வந்து அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிழா தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் நாங்குப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Viralimalai ,temple ,devotees ,Thangalpatti Muthuramaniamman ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா