×

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தவர் பலி

மானாமதுரை, மே 28: மானாமதுரை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார். மானாமதுரை அருகே இடைக்காட்டூரை சேர்ந்தவர் நாகூர் மீரா(57). இவர் நேற்று அதிகாலை நோன்பு இருப்பதற்காக பள்ளிவாசல் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றார். அப்போது தொட்டியின் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் வழுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்துவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : victim ,
× RELATED ராகிங் கொடுமைக்கு மாணவர் பலி;...