×

பொன்னமராவதி அருகே கேராபட்டியில் ஒடிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள் விபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா?

பொன்னமராவதி, மே 28: பொன்னமராவதி அருகே கேராபட்டியில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அருகே கேசராபட்டி செங்கண்மாயில் மூன்று மின் கம்பங்கள், குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் தொட்டி அருகில் ஒரு மின்கம்பம் என மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. ஊரின் மையப்பகுதி, கோபாலபுரம் மேற்குப்பகுதி என பலஇடங்களில்  மின்கம்பம் முழுவதும் சிமெண்ட் காரைகள் விழுந்த நிலையில் எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. மேலும் இதற்கு இழுவை கம்பிகள் எதுவும் இல்லை. சிறிய காற்று வந்தாலே விழும் நிலையில் உள்ளது. எனவே இது என் நேரம் வேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற நிலையில் உள்ளது. மின்கம்பமானது முழுவதும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் கொண்டை பகுதி சிமெண்ட் பிடிமானம் இல்லாமல் எலும்பு கூடு போல காட்சி அளிக்கிறது. நெஞ்சாலை, ஊரின் மையப்பகுதி என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் என மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,collapse ,Ponnaravarati ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்