×

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் புகுந்த பாம்பு

அரியலூர்,மே 28: அரியலூர்  எஸ்பி அலுவலகத்தில் பாம்பு ஒன்று நேற்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும், அதே வளாகத்தில் பத்திர பதிவு அலுவலகமும் உள்ளது. இந்த அலுவகத்தின் தென்புறம் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று  எஸ்பி அலுவலகத்தில் புகுந்தது. இதனை கண்ட போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வீரர்கள் சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது.


Tags : Office ,Ariyalur ,SP ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 1400 பேர்...