×

மூல நோயால் அவதி வாலிபர் தற்கொலை

கும்பகோணம்,மே 28: கும்பகோணத்தை அடுத்த மாடாகுடிமெயின்ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கண்ணன்(28). இவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டு, மூல நோயால் அவதிப்பட்டு வந்தவர் கடந்த 6 மாதத்திற்கு முன் வீட்டிற்கு வந்து விட்டார்.  பின்னர் ரைஸ்மில்லை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில் மூல நோய் குணமாகாததால் அவதிக்குள்ளான கண்ணன், கடந்த 24ம்தேதி ரைஸ் மில்லில் விஷமருந்தினார். இதனையறிந்த கண்ணன் உறவினர்கள், அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்து விட்டார். இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide victim ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே வரதட்சணை...