×

முத்துப்பேட்ைட அருகே மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

முத்துப்பேட்ைட, மே 28: முத்துப்பேட்டை அருகே மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது ெசய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த வடக்கு செம்படவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வீரமணி (39). இவருக்கும் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் சுலக்சனாவுக்னும் (32) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக சுலக்சனா கோபித்து கொண்டு அகஸ்தியன்பள்ளியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுலோக்சனாவின் தந்தை முருகன், தனது மகளை மருமகனுடன் சேர்த்து வைப்பது சம்பந்தமாக செம்படவன்காட்டுக்கு வந்து சம்பந்தி குடும்பத்தினரிடமும், மருமகன் வீரமணியிடம் பேசியுள்ளார்.

அப்ேபாது தகராறு ஏற்பட்டு மருமகன் வீரமணி கத்தியால் மாமனார் முருகன் நெஞ்சில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் மாமனார் முருகனை கத்தியால் குத்திய மருமகன் வீரமணியை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி திருத்துறைப்பூண்டி சிறையில் அடைத்தார்.



Tags : son-in-law ,Muthupetai ,
× RELATED மோசடி வழக்கில் பாஜ நிர்வாகி கைது;...