×

வைகாசி பொங்கல் விழா

திருமங்கலம், மே 28: திருமங்கலம் கருமாரியம்மன் கோயிலின் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று மஞ்சள்நீராட்டு விழா நடந்தது. திருமங்கலம்-சோழவந்தான் ரோட்டில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோயிலின் வைகாசி பொங்கல் திருவிழா நேற்று துவங்கியது. இதனையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு மஞ்சள் நீரினை ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து நேற்று மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Pongal Festival ,
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...