×

வையம்பட்டி அருகே 100 நாள் வேலையின் போது வெயில் தாக்கத்தால் பெண் தொழிலாளி பரிதாப சாவு

மணப்பாறை, மே 28:  வையம்பட்டி அருகே 100 நாள் வேலை பெண் தொழிலாளி வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.  மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனியார் நிலத்தில் வரப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியில்  மொட்டையம்பட்டியை சேர்ந்த வீரப்பன் என்பவரது மனைவி சின்னம்மாள் உள்பட ஏராளமான பெண்கள் வேலை செய்தனர். தற்போது சுட்டெரிக்கும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பணியின்போது திடீரென்று சின்னம்மாள் மயக்கம் அடைந்துள்ளார். அப்போது அருகில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சக பெண்கள் ஒடிச் சென்று பார்த்தபோது சம்பவ இடத்திலேயே சின்னம்மாள் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.   இதுகுறித்து புதுக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி நேரத்தை குறைத்து காலை நேரங்களில் பணி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், பணி நேரத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளிக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.பலி 2 ஆக உயர்வு:  கடந்த வாரம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள இடையப்பட்டியை சேர்ந்த லெட்சுமி என்பவர் நூறு நாள் வேலை திட்டத்திற்கு சென்று வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில் தற்போது சின்னம்மாளும் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தது சக தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,Vayampatti ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...