×

குளித்தலை- மணப்பாறை சாலை ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல்: புதிய மேம்பாலம் கட்டப்படுமா? வாகனஓட்டிகள் எதிர்பார்ப்பு

குளித்தலை, மே28:  குளித்தலை-மணப்பாறை ரயில்கேட்டில் போக்குவரத்து  நெரிசல் ஏற்படுவதால் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக தினந்தோறும் அதிகாலை முதல் இரவு வரை விரைவு ரயில்கள், பயணிகள் ரயில், விரைவு பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன. அப்போது இந்த குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட் குறைந்தது 30 முறை மூடி திறக்கும் நிலை ஏற்படும் , அந்த சமயத்தில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையும் உண்டாக்குகிறது. ஒரு சில நேரங்களில் இரு மார்க்கத்தில் ஒரே நேரத்தில் ரயில்கள் வருவதால் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூட வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகனங்களில் வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அக்கினி நட்சத்திரம் காலம் முடிவடைந்தாலும் வெப்ப நிலை மாறாமல் அப்படியே இருந்து வருவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் ரயில்வே கேட் மூடப்பட்டதால் சாலையிலே நிறுத்திவிட்டு சாலையோரம் உள்ள மரத்தடிக்கு சென்று விடுகின்றனர். இதனால் ரயில்வே கேட் இருபுறமும் இரு சக்கரவாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் ரயில்வே நிர்வாகம் குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட்டில் போக்குவரத்தை சீரமைக்க புதிய ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bathroom ,
× RELATED ரூ.15 லட்சத்துக்கு தங்கம் இருக்கு: ரூ.10...