×

கொடைக்கானலில் டூவீலர் திருட்டு

கொடைக்கானல், மே 28:  கொடைக்கானல் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் கோபிநாத் (45).  மின்சாதன பொருட்கள் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் தனது டூவீலரை வீட்டிற்கு வெளியே டூவீலரை நிறுத்தி சென்றுள்ளார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு நின்ற டூவீலரை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோபிநாத் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Duweiler ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...