×

திமுக நிர்வாகிகளுடன் கவுதமசிகாமணி எம்.பி. சந்திப்பு

வாழப்பாடி, மே 28:  கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுதமசிகாமணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்று வருகிறார். அதன்படி, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவிடம் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், அயோத்தியாபட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சங்கர், கோபால், ராஜன், வீரமணி உள்ளிட்ட ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர், வாழப்பாடி நகர திமுக அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ தமிழ்செல்வன், வாழப்பாடி நகர செயலாளர் செல்வன், மாவட்ட பிரதிநிதி வக்கீல் பாலாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்.செந்தில், முருகமணி, கலைச்செல்வி மாது, கலைச்செல்வி தனபால், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் குறிச்சி பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் குமார், கருணாகரன், கமல்ராஜா, நிர்வாகிகள் கலைஞர் புகழ் ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்தார். இதேபோல், பெத்தநாய்க்கன்பாளையம் ஒன்றியத்தில் ஏத்தாப்பூர் நகர செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய நிர்வாகிகள் வக்கீல் மனோகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி முத்துலிங்கம், ஒன்றிய துணைச்செயலாளர் சிவராமன், ஆத்தூர் ஒன்றிய நிர்வாகி ராஜா, மகாதேவன் உள்ளிட்ட பலரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags : GautamSamikani ,DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு