×

மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தற்கொலை

மேச்சேரி, மே 28:  மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தைலம்மாள்(19). இவரது பெற்றோர் இறந்து விட்ட நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கூனாண்டியூரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மதியழகன்(26) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. நேற்று முன்தினம், கால் வலி அதிகமாக உள்ளதால், மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என கணவரிடம் தைலம்மாள் கூறியுள்ளார். அதற்கு அவர், மழை வருவது போல் இருப்பதால் நாளை அழைத்துச்செல்கிறேன் என தெரிவித்துள்ளார். பின்னர், இரவு சாப்பிட்டு விட்டு குழந்தையுடன் 3 பேரும் தூங்கியுள்ளனர். அதிகாலையில் மின்விசிறியில் புடவையில் தூக்கிட்டவாறு தைலம்மாள் தொங்கிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று மீட்ட போது, தைலம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், மேச்சேரி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தைலம்மாளுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், மேட்டூர் ஆர்டிஓ விசாரித்து வருகிறார்.


Tags : teenager ,suicide ,hospital ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...