×

திருச்செங்கோட்டில் டேக்வாண்டோ பயிற்சி நடுவர்களுக்கான பயிலரங்கம்

திருச்செங்கோடு, மே 28: திருச்செங்கோட்டில் தமிழ்நாடு டேக்வாண்டோ அகாடமி சார்பில், டேக்வாண்டோ பயிற்சி மற்றும்  நடுவர்களுக்கான 2 நாள்  பயிலரங்கம் நடந்தது. இதில் கொரிய நாட்டின் டேக்வாண்டோ கிராண்ட்  மாஸ்டர் லீ  ஜூயோங் ஹீ கலந்து கொண்டு பயிலரங்கை துவக்கி வைத்தார். தமிழ்நாடு குக்கி வான் டேக்வாண்டோ அகாடமியின்  பொதுச்செயலாளர் கேசவமணி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இறுதி போட்டியில் 5வது குக்கிவான் டேக்வாண்டோ பயிலரங்கில் கலந்து கொண்டு  பயிற்சி பெற்றவர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  இந்த  பயிலரங்கில் 41 தேசிய நடுவர்களும், வரும்  4ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள அகில இந்திய டேக்வாண்டோ போட்டிகளில் பங்கு பெற உள்ள 11  வீரர்களும் தேர்வு  செய்யப்பட்டனர். பயிற்சி ஏற்பாடுகளை மாநில பொதுச்செயலாளர் கேசவமணி, ஈரோடு மாவட்ட தலைவர் ராஜவேல் செய்திருந்தனர்.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்