×

கொசு ஒழிப்பு பணியாளர்கள் வேலை கேட்டு கலெக்டரிடம் மனு

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 8 ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் கொசுப்புழு ஒழிக்க (மஸ்தூர்) 422 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒருநாளைக்கு ₹236 சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 மாதமாக வேலை வழங்கப்படவில்லை என்று கொசு ஒழிப்பு பணியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். மனு அளித்த பின்னர் அவர்கள் கூறுகையில், ‘கடந்த 10 வருடமாக கொசு ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறோம். ₹60 சம்பளத்தில் இருந்து வேலை செய்து வருகிறோம். தற்போது சம்பளம் ₹236 வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது எங்களுக்கு சரியாக வேலை வழங்குவதில்லை. எங்களுக்கு வேறு வேலையும் வழங்க மறுக்கிறார்கள். கடந்த ஜனவரி முதல் 5 மாதமாக எங்களுக்கு வேலையும் வழங்கவில்லை. இதனால் மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே, எங்களுக்கு வேலை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : petitioner ,mosquito eviction workers ,
× RELATED வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே...