×

கள், மது விற்ற 3 பேர் கைது

புளியங்குடி, மே 28:  புளியங்குடி  எஸ்ஐ குருசந்தவடிவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சுப்பிரமணியபுரம்  பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தோட்டத்தில் கள் இறக்கி  விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளத்துரை(45)  மற்றும் நாகராஜ்(50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுபோல்  சுப்பிரமணியபுரம் வடக்கு ரதவீதியில் பெட்டிக்கடையில் மது விற்றதாக  முருகேசன்(60) என்பவரை கைது செய்தனர்.

Tags : S arrest ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது