×

ஆலங்குளம், சங்கரன்கோவிலில் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆலங்குளம், மே 28:  ஆலங்குளம் சேகரம் ரட்சண்யபுரம் கிறிஸ்து ஆலய 45வது பிரதிஷ்டை பண்டிகை, கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி 3 நாட்கள் நடந்தது. முதல் 2 நாட்கள் ரேனியஸ் நகரில் கன்வென்ஷன் கூட்டங்களும், நேற்று முன்தினம் பிரதான பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. ஆலங்குளம் சேகர குரு டேனியல் சாலமோன் தலைமை  வகித்தார்.  மதுரை டிஜி சேகர் பாடல்கள் பாடி தேவசெய்தி அளித்தார். ஆலய  பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ரேனியஸ் நகரில் பசுமை இயக்கம்  சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் புஷ்பலதா ஜான், பாபு, கண்ணன், செல்வா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை ரட்சண்யபுரம் சபை ஊழியர் ஜெபராஜ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர். சங்கரன்கோவில் தூயபவுல் காதுகேளாதோர் மையம் சார்பில், தூயபவுல் ஆலய சிற்றாலயத்தின் 12வது பிரதிஷ்டை பண்டிகை நடந்தது. கேடிசி நகர் பி காலனி சேகர தலைவர் ராஜா கிறிஸ்டோபர் கலந்து கொண்டு தேவசெய்தி வழங்கி, திருவிருந்து நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள், ஐக்கிய விருந்து நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காதுகேளாதோர் மையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தூய பவுல் சிற்றாலயத்தை சேர்ந்த மூப்பர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சபை ஊழியர்கள் மைக்கேல் என்கிற மாரியப்பன், பைசோன் செய்திருந்தனர். காதுகேளாதோர் திருப்பணி விடையாளர் மார்ட்டின் நன்றி கூறினார்.

Tags : Lord ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்