கோவில்பட்டி, மே 28: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் திமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம் தலைமை வகித்தார். கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பூசாரிபட்டி கிளை செயலாளர் பன்னீர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தாமோதரகண்ணன், நாலாட்டின்புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், பீட்டர், கருப்பசாமி, அழகு, கூடலிங்கம், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாதேஷ்வரன், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ெஹல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது