×

கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்செந்தூர், மே 28:  திருச்செந்தூர் கலைக்கல்லூரியில் 1975ம் ஆண்டு பிபிஏ படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை வகித்தார். ரவிச்சந்திரன் வரவேற்றார். ஓய்வு ஐஏஎஸ் மச்சேந்திரநாதன், பேராசிரியர் நாராயணராஜன் பேசினர்.  நிகழ்ச்சியில் பயிற்றுவித்த பேராசிரியர்கள் ஆழ்வார், மோகன்சுயம்புராஜ், லடிஸ்லாஸ்ரோட்ரிகோ ஆகியோருக்கு மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் தலைமை செயலாளர் ஜெயகுமார்பொன்ராஜ், முன்னாள் மாணவர்கள் ராஜாசந்திரசேகர், சேவியர்ராஜன், விஜயகுமார், மந்திரம், அக ஸ்டின், தர், ரவிக்குமார் மற்றும் பயின்ற மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆறுமுகநயினார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரவிச்சந்திரன், வாசுதேவன், கந்தசாமி செய்திருந்தனர்.


Tags : College alumni ,
× RELATED கடையநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்