×

பைக்குகள் மோதி வாலிபர் பலி

உடன்குடி,மே 28: ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மகராஜன்(33). குரும்பூரில் பூக்கடை வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி வனப்பிரியா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்றுமுன்தினம் மகராஜன் தனது  உறவினர் சத்யராஜ் என்பவருடன்குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோயிலுக்கு சாமி கும்பிட பைக்கில் வந்தார். கல்லாமொழி அருகே வரும் போது உடன்குடி பதுவைநகரைச் சேர்ந்த ஜேசுராஜ்(35) என்பவரது பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகராஜன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு மகராஜன் இறந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : young lady kills ,
× RELATED மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி