×

55ம் ஆண்டு நினைவு தினம் நேரு உருவப்படத்திற்கு காங்கிரஸ் மாலை அணிவிப்பு

நாகர்கோவில், மே 28: முன்னாள் பாரத பிரதமர் நேருவின் 55ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநகர தலைவர் அலெக்ஸ் முன்னிலை வகித்தார். வட்டார தலைவர்கள் ராஜஜெகன், அசோக்ராஜ், முருகானந்தம், ஜெரால்டு கென்னடி, மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், ராஜதுரை, அந்தோணிமுத்து, வடலி மகாலிங்கம், ஐஎன்டியுசி முருகேசன், தவசிமுத்து, லாரன்ஸ், முன்னாள் கவுன்சிலர் சேவியர், ஆன்றனி மிக்கேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : occasion ,Nehru ,party ,Congress ,
× RELATED பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர்...