×

கல்லூரி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

துரைப்பாக்கம், மே 28: செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிமாணவர்களுக்கு அங்குள்ள கேன்டீனில் உணவு வழங்கப்படுகிறது. இந்த கேன்டீனில் பிற மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், கேன்டீனில் பணிபுரியும் 150 பேரை கல்லூரி நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பணியாளர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து, செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கேன்டீன் பணியாளர்களிடம் சமரசம் பேசினர். இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.பின்னர், கல்லூரி நிர்வாகத்திடம் பேச முயன்றபோது, யாரும் பேச முன்வரவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத போலீசார், அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனால், கேன்டீன் பணியாளர்கள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : College staff ,
× RELATED கல்லூரி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்