×

பட்டப்பகலில் துணிகரம் வீட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை

உத்திரமேரூர், மே 28: பட்டப்பகலில், கூலி தொழிலாளி வீட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.உத்திரமேரூர் அடுத்த பெருநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (60) கூலித் தொழிலாளி.  இவரது மகளின் திருமணத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் 20 சவரன் நகை வாங்கி வைத்திருந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ராமலிங்கம், கூலி வேலைக்கு சென்றார். பின்னர் மனைவி மற்றும் மகள் வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்க்க சென்றனர். மதியம் சாப்பிடுவதற்காக ராமலிங்கம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 20 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.புகாரின்படி பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கூலி தொழிலாளி வீட்டை உடைத்து, 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : house ,dressing room ,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...