×

கல்லூரி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கேன்டீனில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும்  மேற்பட்டோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கேன்டீனில் பணிபுரியும் 150 பேரை கல்லூரி நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கேன்டீன் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர், கல்லூரி  நிர்வாகத்திடம் பேச முயன்றபோது, யாரும் பேச முன்வரவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத போலீசார், அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதனால், கேன்டீன் பணியாளர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : College staff ,
× RELATED கல்லூரி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்