திருச்சி, மே 25: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கன்டோன்மென்ட் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், ரயில் ஏற வந்தபோது இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.