நீடாமங்கலம், மே 25: திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டத்திற்கு ரயில் வேகன்களில் பொது விநியோக திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மன்னார்குடி பாமணியில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு மற்றும் மன்னார்குடி, கீழப்பாண்டியில் உள்ள வட்ட கிடங்குகளில் இருந்து 100 லாரிகளில் 1250 டன் சன்ன ரக அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்(ரயில் பெட்டிகளில்) வேலூர் மண்டலத்திற்கு பொது விநியோக திட்டத்திற்கு தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.