காஞ்சிபுரம், மே 25: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடக்கிறது என காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் வாலாஜாபாத் உமா சேகர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெறுகிறது. மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, வசந்தமாலா, தசரதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாநில மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.