×

வரும் 28ம் தேதி முதல் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம்

நாமக்கல், மே 25:  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வரும் 28ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கி, ஜூன் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், வருவாய்த் தீர்ப்பாயம்  எனும் ஜமாபந்தி வரும் 28ம் தேதி தொடங்கி, ஜூன் 10ம் தேதி வரை நடைபெற  உள்ளது. குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் 28 முதல் 3ம் தேதி  வரையும்,  பரமத்திவேலூர் மற்றும் நாமக்கல்லில் 28 முதல் 10ம் தேதி வரையும்  நடக்கிறது.

திருச்செங்கோட்டில் 28 முதல் 12ம் தேதி வரையும், ராசிபுரம்  மற்றும் சேந்தமங்கலத்தில் 28 முதல் 6ம் தேதி வரையும், மோகனூரில் 28 முதல்  4ம் தேதி வரையும், கொல்லிமலையில் 28 முதல் 3ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.ஜமாபந்தி,  வெள்ளிக்கிழமை தவிர அனைத்து வேலை நாட்களிலும், காலை 10 மணிக்கு அந்தந்த  தாலுகா அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துத்துறை அலுவலர்களும்  பங்கேற்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி,  நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : offices ,Taluk ,
× RELATED நகர திமுக அலுவலகம் திறப்பு