×

வாக்காளர்களுக்கு காந்திசெல்வன் நன்றி

நாமக்கல், மே 25: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சின்ராஜ்,  2.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்காக நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி, வார்டு நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : voters ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...