திருச்செங்கோடு, மே 25: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பரமத்திவேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றிக்கு உழைத்திட்ட தோழமை கட்சி தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், திமுக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுக்கும், சார்பு அணி நிர்வாகிகளுக்கும், ஊராட்சி, வார்டு நிர்வாகிகளுக்கும் மற்றும் பெருவாரியான வாக்குகளை அளித்த பொதுமக்களுக்கும், மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்,’ என கூறியுள்ளார்.