×

வாக்கு எண்ணிக்கை முடிந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சப்-கலெக்டர் அலுவலகம் வருகை

நாமக்கல், மே 25:  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் திருச்செங்கோடு விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் இரவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் தொகுதி வாரியாக எடுத்துச்செல்லப்பட்டு, அந்தந்த சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது.

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் நேற்று மாலை வாகனங்களில், நாமக்கல் சப்கலெக்டர் அலுவலகத்துக்கு  கொண்டுவரப்பட்டது. பின்னர், அவை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : office ,Sub-Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்