×

புதுச்சத்திரம் அருகே குடும்ப தகராறில் தம்பதி விஷம் குடிப்பு; கணவன் பலி

சேந்தமங்கலம், மே 25: புதுச்சத்திரம் அருகே குடும்ப தகராறில் தம்பதி விஷம் குடித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழந்தார்.
புதுச்சத்திரம் அடுத்துள்ள குருசாமிபாளையத்தை சேர்ந்த மோகன்  மகன் அருண்ராஜ்(25). இவரது மனைவி கார்த்திகா(24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். அருண்ராஜ் ராசிபுரத்தில் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அருண்ராஜ், கடந்த ஒருவாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவி இடையே  அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கார்த்திகா, சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருண்ராஜ், வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தானும் குடித்தார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அருண்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

Tags : family dispute ,
× RELATED குடும்பத் தகராறில் குழந்தைகளை தீ...