×

வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிய 3 பேர் கைது

தர்மபுரி, மே 25: மாரண்டஅள்ளி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள வீட்டில் ராஜூ(30) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதே பகுதியில் மதுபாட்டில் பதுக்கி விற்ற திருமலைவாசன் என்பவரை கைது செய்த போலீசார், 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், பெரும்பாலை காட்டம்பட்டி பகுதியில் மது விற்ற மாது என்பவரை கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், கடத்தூர் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்பனை செய்து வந்த மணிகண்டன் மற்றும் கனகா ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பெட்டி பட்டாசு மற்றும் சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா