திருப்பூர், மே 25: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாபெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதன் மூலமாக நாடு மேலும் வளர்ச்சி ெபறும். அமைதியான சூழலும் நாட்டில் நிலவும்.
மத்திய அரசு மூலம் வழங்கப்படும் சலுகைகளால் திருப்பூர் பின்னலாடை தொழில் வருகிற 2020ம் ஆண்டு ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கை அடையும். தற்போது ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து மத்திய அரசு தொழில் அமைப்பினருக்கு தேவையான சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.