×

ரயில் பயணியிடம் ஸ்மார்ட் போன் திருட்டு

ஈரோடு, மே 25:   திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் பிரபு (34). இவர், கடந்த 20ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு, ரயிலில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  ரயில் பெட்டியின் சார்ஜர் பாய்ன்டில் செல்போனை சார்ஜ் போட்டிருந்தார். ரயில் பெருந்துறை ஆர்எஸ்.,க்கு அருகே வந்தபோது, பிரபு சார்ஜ் போட்டிருந்த செல்போனை காணவில்லை. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசிடம் நேற்று முன்தினம் பிரபு அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : train passenger ,
× RELATED ரயில் பயணியிடம் செல்போன் திருட்டு