×

மின்னல் தாக்கி மாணவன் பலி

கூடலூர், மே 25:  கூடலூர் அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டீஆர்பஜாரில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது இதே பகுதியை சேர்ந்த சந்திரன் கூலித் தொழிலாளி, இவரது மகன் ஆதர்ஷ்(15) வீட்டில் உள்ள கட்டிலில் தனியாக உறங்கிகொண்டு இருந்தான். அப்போது தலையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இவர் இங்கு உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவந்தான். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags : victim ,
× RELATED கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி