×

திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

மேலூர், மே 25: மேலூர் சிவன்கோயில் அருகில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்த கோயிலின் திருவிழா மே 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலூர் நகர் மட்டுமல்லாது பல்வேறு கிராம மக்களும் இதற்காக நேர்த்திக்கடன் இருந்து வருகின்றனர். விழாவின் ஒரு அங்கமாக நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மே 29ல் பீமன்கீசன் வேடம், ஜூன் 4ல் சக்கரவியூக கோட்டை, 7ல் அர்ச்சுணன் தவசும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 9ல் கூந்தல் விரிப்பு, 10ல் கூந்தல் முடிப்பு, ஜூன் 11ல் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஜூன் 12ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags : ceremony ,Tirupati Damyamman ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா