×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் பதிவெண் நாளை மறுதினம் வெளியீடு அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

திருவண்ணாமலை, மே 25: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவென் வரும் 27ம் தேதி வெளியிடப்பட உள்ளது என அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மதிப்பெண் மறுகூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்திருந்த மாணவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண் பட்டியல் வரும் 27ம் தேதி (நாளை மறுநாள்) வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் scan.tndge.in என்ற இணையளத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் அன்றைய தினம் பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்து இப்பட்டியலில் அவர்களது எண் இடம் பெறவில்லை எனில் அவர்களது விடைத்தாளில் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லை. இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்தார்.

Tags : Registrar ,general ,
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு