×

நாகையில் நாளை கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

நாகை, மே24: நாகை மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நாளை (25ம் தேதி) நடைபெறுகிறது என்று செயலாளர் ஜீலியஸ்விஜயகுமார் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 2019-20ஆண்டிற்கு மாவட்டங்களுக் கிடையிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க நாகை மாவட்ட அணி வீரர்கள் தேர்வு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்  நடைபெறவுள்ளது.14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேர்வு 26ம் தேதி, காலையும், 16 வயதிற்கு உட்பட்டோருக்கு மாலை 3 மணிக்கும் நடைபெறுகிறது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கு தேர்வு நாளை (25ம் தேதி) காலை நடைபெறும்.

Tags : cricket team ,
× RELATED ஆந்திர ரஞ்சி அணிக்காக விளையாடப் போவதில்லை: ஹனுமா விகாரி பகீர்!