×

பந்தலூர் அருகே சாலை சீரமைப்பு பணி மந்தம்

பந்தலூர், மே 24: பந்தலூர் அருகே சாலை சீரமைப்பு பணி மந்த கதியில் நடந்து வருவதால் கிராமமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கையுன்னி உளுவாடு மானிக்காடு வரை சுமார் 800மீ., தூரமுள்ள தார்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதத்திற்கு முன் தார்சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டது. இதையடுத்து தற்போது வரை சாலை சீரமைப்பு பணி நடக்கவில்லை. மேலும், மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் இதுவரை தார்சாலை பணி துவங்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி தார்சாலைப்பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Pandalur ,
× RELATED வனப்பகுதியில் காட்டு தீ