×

வதிலை பஸ்ஸ்டாண்ட் வாயிலில் சுப்பிரமணிய சிவா படம் வைக்க வேண்டும்

வத்தலக்குண்டு, மே 23: வத்தலக்குண்டு பஸ்ஸ்டாண்ட் தோரண வாயிலில் தியாகி சுப்பிரமணிய சிவா படத்துடன் மின்விளக்கும் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா வத்தலக்குண்டுவில் பிறந்தவர். இவரை பெருமைப்படுத்தும் விதமாக பேருராட்சியினர் ரூ.12 லட்சம் செலவில் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பளிங்கு கற்களால் தோரணவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெயர் அருகே படம் வைக்கவில்லை.

இரவில் தெரியுமாறு அருகே மின்விளக்கும் போடவில்லை. இதனால் பகல்நேரத்தில் பெயர் மட்டுமே தெரிகிறது. சுப்பிரமணிய சிவா படத்துடன் மின்விளக்கு வைக்குமாறு பலமுறை கூறியும் பேரூராட்சியினர் கண்டுகொள்ளவே இல்லை. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘குதிரை வண்டியை வாங்கி விட்டு சாட்டை வாங்காதது போல தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு தோரண வாயில் மட்டும் அமைத்து விட்டு படமும், விளக்கும் அமைக்காதது குறையாகவே உள்ளது. எனவே பேருராட்சி உடனே இதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Subramaniya Siva ,residence ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...