×

வாக்குப்பதிவு இயந்திரம் மாறியதால் வாக்குவாதம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது புதுப்பேட்டை வாக்குச்சாவடியில் மக்களவை தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தவறுதலாக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த இயந்திரத்தை தவிர்த்து மற்ற பூத்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. புதுப்பேட்டை பூத்தில் பதிவாகியிருந்த வாக்குகள் 844. இதனால் அந்த வாக்குகளை எண்ணாமலே திமுக வேட்பாளரின் வெற்றி உறுதியானது. இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த என்ஆர் காங்கிரஸ் முகவர்கள், புதுப்பேட்டை பூத் வாக்கு இயந்திரம் எங்கே? அதனுடன் சேர்த்து 3வது சுற்றில் ஏன் எண்ணப்படவில்லை? என கேட்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...