×

திமுக வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு அனிதாராதாகிருஷ்ணன், கீதாஜீவன் நன்றி

தூத்துக்குடி, மே 24:  தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி  வெற்றி குறித்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியதாவது: இந்த தேர்தல் முடிவு தமிழக மக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. திமுக கூட்டணி தான் தமிழகத்துக்கு நன்மை செய்யும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களித்துள்ளனர். அதனை நிறைவேற்றும் வகையில் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது. இது ஒரு புதிய சகாப்தம். இந்த வெற்றிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மீது மக்கள் கொண்டுள்ள மாறா அன்பை காட்டுகிறது. திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், வெற்றிக்கு உழைத்த திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கூறியதாவது: தூத்துக்குடி தொகுதி வெற்றி எதிர்பார்த்த ஒன்றாகும். தலைவர் கருணாநிதி மகளும், திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி வெற்றி பெற வேண்டுமென்று பொதுமக்கள் விரும்பினார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கனிமொழி மத்திய அமைச்சராக வேண்டும் என்று எண்ணினர். அதனால் மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளனர். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப திமுக தொடர்ந்து பாடுபடும். வெற்றிக்கு உழைத்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்

Tags : Anitharathakrishnan ,victory ,DMK ,
× RELATED காங். மூத்த தலைவர் பேட்டி...