ஊட்டி மே 23:ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகிக் ஒரு வார ஓய்விற்கு பின் நேற்று பிற்பகல் சென்னை திரும்பினார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக கடந்த 16ம் ேததி ஊட்டி வந்தார். பின்னர், 17ம் தேதி காலை தாவரவியல் பூங்காவில் நடந்த 123வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, முக்கிய சுற்றுலா தலங்களை தனது குடும்பத்துடன் சுற்றிப்பார்த்தார். நேற்று முன்தினம் மாலை மலர் கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாலை ஆடாசோலை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இந்நிலையில், சென்ைன செல்ல நேற்று பிற்பகல் ஊட்டியில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையத்திற்கு சென்றார். பிின்னர்,மாலை 3மணி அளவில் விமானம் மூலம் கோவையிலிருந்து சென்னை கிளம்பி சென்றார்.