×

மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா? மாவட்டம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள இளநீர் இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்

மேலூர், மே 23: மேலூரில் நேற்று நடந்த சவ ஊர்வலத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலூர் நொண்டிக்கோவில்பட்டியை சேர்ந்த லட்சுமணன் நேற்று இறந்தார். அவரது உடலை, அடக்கம் செய்ய நேற்று மாலை மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது டூவீலரில் வந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த 3 பேர், இறுதி ஊர்வலத்தில் நுழைந்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனை ஊர்வலத்தில் சென்றவர்கள் தட்டி கேட்க, அது மோதலாக வெடித்தது.
இதனைத்தொடர்ந்து இருதரப்பு கோஷ்டி மோதலாக மாறியது. கம்பு, அரிவாள், கத்தியுடன் மோதிக் கொண்டனர். இதில், சிலருக்கு காயம் ஏற்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

Tags : confrontation ,district ,funeral procession ,
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...