×

கலெக்டர் நாகராஜன் பேட்டி வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 23: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்தாண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் முதலாமாண்டு நினைவு நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதில், மாவட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். வக்கீல் கனகவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Nagarajan ,interview lawyers ,demonstration ,
× RELATED குளச்சல் அருகே அரசு பஸ் டிரைவருக்கு உருட்டுக்கட்டை அடி 6 பேர் மீது வழக்கு